உலகம்

கோழி பணிஸில் இறந்த நிலையில் பாம்பு – அதிர்ச்சி சம்பவம்

தெலுங்கானா மாநிலத்தில் பேக்கரி ஒன்றில் வாங்கிய கோழி பணிஸில் இறந்த நிலையில் பாம்பு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மஹபூப்நகர் மாவட்டம் ஜட்சர்லாவில் உள்ளூர் பேக்கரியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஸ்ரீசைலா என்ற பெண் நேற்று (12) அங்கு, தனது குழந்தைகளுக்காக ஒரு முட்டை பணிஸ் மற்றும் ஒரு கோழி பணிஸ் வாங்கி சென்றார்.

வீட்டில் கோழி பணிஸ் பார்சலை திறந்தபோது உள்ளே இறந்த சிறிய பாம்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக அதை எடுத்துக்கொண்டு நேராக பேக்கரிக்குச் சென்று கேட்டுள்ளார்.

புகார் அளித்தும், குறித்த வெதுப்பக உரிமையாளர் அதற்கான பதில் அளிக்காமையினால், அந்தப் பெண் பொலிஸில் முறைப்பாடு அளித்தார்.

அதன் பிரகாரம், பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

உலக நாடுகளில் முதல் முறையாக குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி

48 மணி நேரத்திற்குள் வெளியேறுங்கள் : மலேசிய அரசு உத்தரவு

இஸ்ரேலுக்கான சீன தூதுவர் சடலமாக மீட்பு