உள்நாடு

‘கோட்டாபயவுக்கு இலங்கையிலிருந்து செல்ல இந்தியா உதவவில்லை’

(UTV | கொழும்பு) –   ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரின் வருகைக்கு இந்தியா உதவியது என்ற ஆதாரமற்ற செய்திகளை வன்மையாக நிராகரிப்பதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் பதிவில், இலங்கை மக்கள் ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் ஊடாக செழிப்பு மற்றும் முன்னேற்றத்திற்கான அவர்களின் அபிலாஷைகளை அடைய முயற்சிக்கும் போது அவர்களுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று வலியுறுத்தியுள்ளது.

Related posts

மனநோய்க்கு சிகிச்சைக்கு சென்ற நபர் – அதிவேக நெடுஞ்சாலையில் தவறான திசையில் காரை ஓட்டியதால் கைது

editor

மறைந்த புகழ் பெற்ற நடிகை மாலினியின் இறுதிக் கிரியை நாளை

editor

வத்திக்கான், நியூசிலாந்து இராஜதந்திர பிரதிநிதிகளை சந்தித்தார் பிரதமர் ஹரிணி

editor