உள்நாடு

கொவிட் 19 : மீளவும் மக்களுக்கான அறிவுறுத்தல்

(UTV | கொழும்பு) – ஆரம்பத்தில் நாட்டில் கொவிட் – 19 எனும் கொரோனா வைரஸ் பரவியபோது நிலைமையை கட்டுப்படுத்த சுகாதார மற்றும் பாதுகாப்பு துறையினரின் அர்ப்பணிப்பைப் போலவே மக்களும் புத்திசாலித்தனமான செயற்பட்டது மிகவும் உதவியாக அமைந்தது.

மீண்டும் நாட்டில் கொரோனா வைரஸ் விரைவாக பரவுவதை தடுக்க இச்சந்தர்ப்பத்திலும் பொறுப்புணர்வுடன் செயற்படுவது மிக முக்கியமாகும்.

– உங்களுக்கு காய்ச்சல் இருமல் தடிமன் ஆகிய நோய் அறிகுறிகள் இருப்பின், விரைவாக வைத்திய ஆலோசனையை பெற்றுக் கொள்ளுங்கள்.

– வைத்திய ஆலோசனை பெறச் செல்லும் போது பொது போக்குவரத்து சேவையைப் பெறுவதை இயலுமானளவு தவிருங்கள்.

– போக்குவரத்துகளை தவிர்த்து வீட்டில் தரித்திருங்கள்

– மேலதிக தகவல்களைப் பெற 1999 சுவசெரிய தொலைபேசி சேவையை அழையுங்கள்.

– நாட்டின் எதிர்கால நிலைமை எவ்வாறு அமையப் போகின்றது என்பதைத் தீர்மானிப்பது இன்றைய எமதும் உமதும் பொறுப்புணர்வுடனான செயல்பாட்டிலேயே தங்கியுள்ளது.

Related posts

 அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன விவாதம் எதிர் வரும் 9,10 ஆம் திகதிகளில்..

நார்கோர்டிக் அதிகாரிகள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

50 பேர் இல்லாத ஊரில் விகாரை – மன்னாரில் சம்பவம் : விரைந்தார் சாள்ஸ்