சூடான செய்திகள் 1

கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

(UTV|COLOMBO) கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமுல்படுத்துவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடம் 6 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரஸீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தை விட இவ்வருட ஆரம்பப் பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர கூறினார்.

 

 

 

Related posts

யால தேசிய வனத்துக்கு சிய வனத்துக்கு பூட்டு

அமெரிக்க மாநிலங்கள் அனைத்தும் மீளத் திறக்க தீர்மானம்

அஸ்வெசும இரண்டாம் கட்டம் தொடர்பில் வௌியான தகவல்

editor