கொழும்பு மாநகர சபையில் ஶ்ரீ லங்கா பொதுஜன ஐக்கிய முன்னணி பெற்றுக்கொண்ட ஒரேயொரு உறுப்பினர் பதவிக்கு தீபா எதிரிசிங்கவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன ஐக்கிய முன்னணியின் கொழும்பு மேற்கு அமைப்பாளராக தீபா எதிரிசிங்க செயற்பட்டு வருகின்றார்.
இருப்பினும், அந்தப் பதவிக்கு அவரை முன்னிறுத்துவதற்கு கட்சியின் சில தரப்பினருடமிருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
இது தொடர்பான கடிதமொன்றை கட்சி உறுப்பினர்களால் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.