கொழும்பு – கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில் இன்று (08) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று (07) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
கார் ஒன்றில் வந்த நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றிருந்தனர்.
இந்த சம்பவத்தில் குற்றவியல் குழு உறுப்பினர் பாலச்சந்திரன் புஷ்பராஜ் என்ற நபர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது
-பிரதீபன்
