(UTV | கொழும்பு) – கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களில் பயணிக்கின்ற நபர்களின் வெப்பநிலையை கணிப்பிடும் வேலைத்திட்டமொன்று ராஜகிரிய பகுதியில் இன்று முற்பகல் ஆரம்பமாகியது. இராணுவத் தலைமையகத்தினால் இது முன்னெடுக்கப்பட்டது.
திடீரென வெப்பநிலையை கணிப்பிடும் வேலைத்திட்டம் கொழும்பு பகுதியிலும் ஏனைய மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படுகிறது. உடல் வெப்பநிலை கூடியவர்கள் மேலதிக பரிசோதனைகளுக்காக அம்பியுலன்ஸ் வண்டி மூலம் இராணுவ வைத்தியசாலைக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්


