சூடான செய்திகள் 1

கொழும்பில் 24 மணி நேர நீர் வெட்டு…

(UTV|COLOMBO) கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு இன்று 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது.

இன்று (30) காலை 09.00 மணிமுதல் நாளை காலை 09.00 மணி வரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

மின்சார சபையின் திடீர் மின்வெட்டு மற்றும் அத்தியாவசிய திருத்தப் பணிகளுக்காக இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது.

இதற்கமைய, கொழும்பு, கோட்டை, தெஹிவளை, கல்கிஸ்ஸ, கடுவல மாநகர சபை பிரதேசம், பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபை பிரதேசம், கொட்டிகாவத்தை, முல்லேரியாவ பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசம், றத்மலானை, சொய்ஸாபுர ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

 

 

 

Related posts

மண் மேடு சரிந்து ஒருவர் பலி

துப்பாக்கி மற்றும் ஒரு தொகை தோட்டாக்கள் கண்டுபிடிப்பு

கடவுச்சீட்டு பிரச்சினைக்கு தீர்வு – குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தை 24 மணி நேரமும் இயக்க தீர்மானம்

editor