உள்நாடு

கொள்ளுப்பிட்டியில் ரயில் தடம் புரண்ட சம்பவத்தை மீட்பதில் மேலும் தாமதம்

(UTV | கொழும்பு) – ரயில் தடம் புரண்டதால், கரையோர ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.

காங்கசந்துறையில் இருந்து கல்கிஸ்ஸ நோக்கி பயணித்த அதிவேக புகையிரதம் நேற்றிரவு கொள்ளுப்பிட்டிக்கு அருகில் ரயில் நிலையத்திற்கு திரும்பிக்கொண்டிருந்த போது தடம் புரண்டது.

புகையிரத பாதை பாரியளவில் சேதமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் பாதையினை சீர் செய்யும் பணி ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும், பணி மேலும் தாமதமாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, கரையோர புகையிரதத்தில் பயணிக்கும் புகையிரதம் ஒரு பாதைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

editor

பத்தரமுல்ல தலைமை அலுவலகத்திற்கு மறுஅறிவித்தல் வரை பூட்டு

ஜனாதிபதியின் சம்பள உயர்வு முன்மொழிவிற்கு ஜீவன் தொண்டமான் வரவேற்பு!