உள்நாடு

 கொலை சம்பவங்களுக்கு உதவியவர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

(UTV |ராகம ) –    கொலை சம்பவங்களுக்கு உதவியவர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

இரண்டு கொலை சம்வங்களுக்கு உதவி செய்த நான்கு சந்தேக நபர்களை கனேமுல்ல மற்றும் ராகம பிரதேசத்தில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் வெலிப்பில்லெவ-கனேமுல்ல பகுதியில் வாடகை அறையில் தங்கியிருந்த போது ஹெரோயின் மற்றும் கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அங்கிருந்து மற்றொரு சந்தேக நபரின் வெளிநாட்டு கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் வேன் ஒன்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது .

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பங்களாவத்தை, கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவருமாவார்.
மேலும் , ஹெரோயின் போதைப்பொருளுடன் ஏனைய மூவரும் எலபிடிவல, ராகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 5 கிராம் 580 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கையடக்கத் தொலைபேசி, இலத்திரனியல் தராசு மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த மூவரும் 23, 24 வயதுடைய ராகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பல நுகர்வுப் பொருட்களின் விற்பனை மற்றும் சேமிப்பு குறித்து விசேட வர்த்தமானி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நான்கு நீதியரசர்கள் நியமனம்.

editor

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை Dr. அர்ச்சுனாவை வன்மையாக கண்டிக்கின்றது

editor