உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த உதவுங்கள்

(UTV|கொழும்பு) – தேசிய பொறுப்பாக கருதி உயிர் அச்சுறுத்தல் மிக்க கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதன் மூலம் நாடு என்ற வகையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்குமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று(11) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உலகின் பல்வேறு முக்கிய நாடுகள் கட்டுப்படுத்த முடியாத வகையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு முகங்கொடுத்துள்ளன. குறித்த நிலையில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

மக்கள் எதிர்பார்க்கும் இலங்கை நிச்சயம் உருவாக்கப்படும் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

editor

“கடந்த வரவு செலவுத் திட்டத்தில் பொய்யான வருவாயைக் காட்டி நாடாளுமன்றம் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளது”

ரணிலின் கைது தனிப்பட்டதொரு சம்பவமல்ல, மாறாக ஜனநாயக அரசியலுக்கு விடுக்கப்பட்டதொரு வலுவான சவாலாகும் – சஜித் பிரேமதாச

editor