உள்நாடு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,941 அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் மேலும் 14 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது

ஐக்கிய அரபு இராஜியத்தில் இருந்து நாடு திரும்பியுள்ள 12 பேருக்கும், இந்தோனேசியா நாடு திரும்பியுள்ள ஒருவருக்கும் மற்றும் குவைத்திலிருந்து நாடு திரும்பியுள்ள ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

இந்த நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,789 ஆக பதிவாகியுள்ளது

தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 141 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

நாளை மறுதினம் சிறப்பு வங்கி விடுமுறை

“கிழக்கிலங்கையின் கல்விப் பொக்கிஷமான பேராசிரியர் இஸ்ஹாக் அவர்களின் மறைவு கவலை தருகின்றது” – ரிஷாட் எம்.பி அனுதாபம்

editor

நிவாரணங்கள் வழங்க அரச அதிகாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை