உள்நாடு

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 11 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று(30) சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,860 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் இதுவரை 2,995 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 123 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டமூலம் நிறைவேற்றம் | வீடியோ

editor

இன்று, QR குறியீட்டிற்கு எரிபொருள் வழங்கப்படும் இடங்கள்

டிக்கோயா தரவளை பிரதேசம் கொரோனா தனிமைப்படுத்தப்பட்டது