உள்நாடு

கொரோனா காரணமாக வத்தளை பகுதியில் பதற்ற நிலை

(UTV|கொழும்பு) – கொரோனா காரணமாக வத்தளை எலகந்த பகுதியில் இன்றும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து தனிமைப்படுத்தப்பட்ட இடமாக ஹந்தல வைத்தியசாலை மாற்றப்பட்டதை கண்டித்து வத்தளை எலகந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில் குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய பணி நீக்கம்

அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் | 2021.03.29

இதுவரை 892 கடற்படையினர் குணமடைந்தனர்