உலகம்

கொரோனா – பலி எண்ணிக்கை 19 ஆயிரத்தை தாண்டியது

(UTVNEWS | COLOMBO) – கொரோனா வைரஸ் தற்போது உலகின் 196 நாடுகளில் பரவியுள்ளது.

இந்நிலையில், ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா உள்பட உலகின் அனைத்து பகுதிகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி கொரோனா தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 19 ஆயிரத்து 799 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 4 இலட்சத்து 46 ஆயிரத்து 287 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 050 பேர் சிகிச்சைக்கு பின் வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இத்தாலியில் தொடர்ந்து அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரசுக்கு நேற்று மட்டும் அதிக அளவாக 743 பேர் பலியாகி உள்ளனர்.

இதன்மூலம் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 6,820 ஆக உயர்ந்துள்ளது.

Related posts

தென் கொரிய ஜனாதிபதி பதவி நீக்கம் – 60 நாட்களுக்குள் தேர்தல்

editor

ஆசியாவின் மிகவும் வயதான யானை உயிரிழந்தது

editor

கொரோனா வைரஸ்; பலி எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்தது