வகைப்படுத்தப்படாத

கொன்சர்வேட்டிவ் கட்சி முன்னிலையில்..

(UDHAYAM, COLOMBO) – பிரிட்டனில் வெளியிடப்பட்டுவரும் பொதுத் தேர்தல் பெறுபேறுகளின்  அடிப்படையில் கொன்சர்வேட்டிவ் கட்சி முன்னிலையில் உள்ளது.

650 தொகுதிகளில் 646 தொகுதிகளின் முடிவுகள் சற்று முன்னர்வரை வெளியிடப்பட்டுள்ளன.

அந்தத் தொகுதிகளில் கொன்சர்வேடிவ் கட்சி 315 ஆசனங்களையும், தொழில் கட்சி 261 ஆசனங்களையும் பெற்றுள்ளன.

நாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தை தக்க வைக்க 326 ஆசனங்கள் அவசியம்.

எனினும், கன்சர்வேட்டிவ் கட்சி முன்னிலையில் இருக்கின்ற போதும் பெரும்பான்மை அதிகாரத்தை பெற்று கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பிரிட்டனில் தொங்கு நாடாளுமன்ற நிலைமை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி அன்பளிப்புகள்

சாரங்கவின் சகாக்களுக்கு விளக்கமறியல்

60 அடி பள்ளத்தில் பாய்ந்து கார் விபத்து 6 வயது சிறுவன் பலி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயம் கினிகத்தேனையில் சோகம்