உள்நாடு

கைதான டெய்சி ஆச்சி பிணையில் விடுதலை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட டெய்சி ஆச்சி என்ற யோசித்த ராஜபக்ஷவின் பாட்டியான டெய்சி ஃபாரஸ்ட் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, அவர் தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்க கடுவலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று (05) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

பௌசியின் மகன் நௌசர் பௌசி கைது!

இலங்கை மத்திய வங்கி தனது வட்டி விகிதங்களை குறைக்க தீர்மானம்!

நீச்சல் குளத்தில் மூழ்கி 23 வயதுடைய இளைஞன் பலி

editor