உலகம்

‘கூடிய விரைவில் போரை நிறுத்துவோம்’ – புடின்

(UTV |  உஸ்பெகிஸ்தான்) – உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவோம் என இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெற்ற ஷாங்காய் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற புதினும், மோடியும் மாநாட்டின் போது சந்தித்து கலந்துரையாடினர். அங்கு, ரஷ்ய-உக்ரேனிய போர் முக்கிய தலைப்பாக மாறியது.

ரஷ்ய ஜனாதிபதி புதினின் உத்தரவின் பேரில், கடந்த பெப்ரவரி மாதம் ரஷ்ய ராணுவம் உக்ரைன் மீது படையெடுத்தது. படையெடுப்பிற்குப் பிறகு புதினும் மோடியும் நேருக்கு நேர் சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவாகும்.

இந்நிலையில், இந்திய பிரதமர் மோடியை பாராட்டி அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏனென்றால், மோடி புடினை சந்தித்தபோது, ​​உக்ரைன் மீது எடுக்கப்பட்ட ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது.

Related posts

காசா – இஸ்ரேல் இடையே தினசரி 10 மணி நேரம் போர் நிறுத்தம் – மனிதாபிமான உதவிகளை விநியோகிக்க நடவடிக்கை

editor

உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

editor

உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா