உள்நாடு

குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது!

10 கிலோவுக்கும் அதிகமான குஷ் போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து வந்த குறித்த சந்தேகநபர் காலை 7 மணியளவில் கைது செய்யப்பட்டதாக சுங்கத்திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிதாக நிறுவப்பட்ட ஸ்கேனிங் இயந்திரத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

லீப் தினத்தில் பிறந்த பெண், இவ்வருட லீப் தினத்தன்று ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்

தம்புள்ளை வெப்பநிலை களஞ்சியம் திறப்பு – உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன் – ஹர்ஷ டி சில்வா எம்.பி

editor

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அட்டவணை வெளியீடு

editor