உள்நாடுபிராந்தியம்

குளத்திற்கு குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

கிளிநொச்சி கரியாலை நாகபடுவான் குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று சனிக்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பூனகரி ஜெயபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரியாலை நாகபடுவான் குளத்தில் நான்கு சிறுவர்கள் குளத்தில் குளிக்கச் சென்றுள்ளனர்.

தரம் 11-ல் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதில் ஒரு சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில் கிராமவாசிகள் ஒன்றிணைந்து குறித்த சிறுவனை தேடி நீண்ட நேரங்களின் பின் சிறுவன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்டுள்ள சிறுவனின் சடலம் உடல் கூற்று பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஜெபுரம் மற்றும் முழங்காவில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

நாடளாவிய ரீதியில் உள்ள சிறை கைதிகளை பார்வையிட தடை

சாமர சம்பத் எம்.பி மீளவும் விளக்கமறியலில்

editor

ஈஸ்டர் தாக்குதல்: நிலந்த ஜயவர்தனவுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு