உள்நாடு

குருநாகல் நகரசபை தலைவர் உள்ளிட்ட குழுவினரை கைது செய்ய விசேட குழுக்கள்

(UTV|குருநாகல் ) – குருநாகல் புவனேகபாகு மன்னர் கட்டடம் தகர்க்கப்பட்டமை சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரவிக்கப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள குருநாகல் நகரசபை தலைவர் உள்ளிட்ட குழுவினரை கைது செய்வதற்கு 4 விசேடகுழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருநாகல் நகரசபை தலைவர் மற்றும் ஆணையாளர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்யுமாறு சமீபத்தில் சட்டமா அதிபரால் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறுவுறுத்தப்பட்டிருந்தது.

குருநாகல் புவனேக்க ஹோட்டல் நடத்திச் செல்லப்பட்ட கட்டடம் இடிக்கப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டில் சட்டமா அதிபரினால் பொலிஸ் மா அதிபருக்கு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

செப்டம்பர் மாதம் இடைக்கால வரவு-செலவுத்திட்டம்

ஜனாதிபதியை சந்தித்த பிரித்தானிய இளவரசி!

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு