உள்நாடுபிராந்தியம்

குருநாகலில் தீ விபத்து – ஒருவர் பலி

குருநாகல் பொலிஸ் பிரிவின் வில்பாவ பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக தங்குமிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று (20) இரவு இடம்பெற்ற இந்த தீ விபத்து குறித்து குருநாகல் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் வத்தேகம பகுதியைச் சேர்ந்த 36 வயதானவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

சவேந்திர சில்வா தமக்கு எதிராக வழக்கு தொடரும் வரையில் காத்திருக்கின்றேன் – விமல்

தற்காலியமாக நிறுத்தப்பட்ட மு.காவின் உயர்பீடக் கூட்டம்!

editor

இலத்திரனியல் அடையாள அட்டை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!