சூடான செய்திகள் 1

குப்பைகளைக் கொண்டுசெல்லும் லொறிகளுக்கு பலத்த பாதுகாப்பு

(UTVNEWS|COLOMBO) – கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை அருவக்காட்டுக்குக் கொண்டு செல்லும் வீதிகளில் பாதுகாப்பிற்காக 100 இற்கும் அதிகமான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குப்பைகளைக் கொண்டுசெல்லும் லொறிகள் பல தடவைகள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளமையினால் பலத்த பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, லொறிகள் மீது தாக்குதல் மேற்கொள்ளும் நபர்களுக்கு பொது சொத்துக்களை சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இலங்கை விமானப்படைக்கு, இந்தியா வழங்கிய விமானம்!

தூதரங்களின் பொறுப்பில் இலங்கை பணிப்பெண்கள்

இலங்கை இராணுவத்தின் புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் பதவியேற்பு