இரண்டாம் உலகபோரின் 80 வருட வெற்றியை கொண்டாடும் முகமாக நாளை (03) சீனாவில் இடம்பெறும் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நிகழ்விற்கு உலகின் தலைவர்கள் அழைக்கப்பட்டு சென்றுள்ள நிலையில், வடகொரிய ஜனாதிபதி கிம்ஜோங் உங் இன்று (02) குண்டு துளைக்காத ரயிலில் சென்று இறங்கினார்.
ரஸ்யா, ஈரான், வடகொரியா, துருக்கி, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட உலகின் முக்கிய தலைவர்கள் தற்போது சீனாவில் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.