உள்நாடு

குணமடைந்தோர் எண்ணிக்கையில் தொடர்ந்தும் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 11 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(08) வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,946 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரை 3,140 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

“ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல்”

கல்பிட்டியில் 10 கிலோ தங்கத்துடன் ஒருவர் கைது

பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் 8 பேருக்கு இடமாற்றம்