அரசியல்உள்நாடு

கிழக்கு மாகாண ஆளுநருடன் சம்மாந்துறை தவிசாளரின் சினேகபூர்வ சந்திப்பு

சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களுக்கிடையிலான சினேகபூர்வ சந்திப்பு, நேற்று (03) வியாழக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கடந்த திங்கட்கிழமை பதவியேற்ற பின்னர், முதலாவது முறையாக கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்த தவிசாளர், சம்மாந்துறை பிரதேசத்தின் பிரச்சினைகள், தேவைப்பாடுகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பில் விரிவான சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.

இச்சந்திப்பு, பிரதேச அபிவிருத்திக்கான புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையில் நடைபெற்றது.

Related posts

மின்சார விநியோகத்தை தடையின்றி மேற்கொள்ள நடவடிக்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடத்தப்பட்ட வர்த்தகர்!

கொரோனா : இது தீர்மானமிக்க தருணமாகும்