உள்நாடுபிராந்தியம்

கிளிநொச்சியில் இரண்டு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

கிளிநொச்சி முகமாலை வேம்படுகேணி பகுதியில் ரயில் கடவைக்கு அருகில் நேற்று இரவு (02) இரண்டு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் சிக்குண்ட ஒரு டிப்பர் வாகனம் ரயில் மார்க்கத்தில் கவிழ்ந்த நிலையில், பெக்கோ இயந்திரம் மூலம் அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண திசையிலிருந்து பயணித்த டிப்பர் வாகனமும், கிளிநொச்சி திசையிலிருந்து பயணித்த மற்றொரு டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்து ஒன்று மக்களை இறக்குவதற்கு குறித்த பகுதியில் தரித்து நின்ற போது, அதனை டிப்பர் வாகனம் ஒன்று முந்தி செல்ல முற்பட்ட போதே இவ்விபத்து இடம்பெற்றது.

விபத்தில் டிப்பர் வாகன சாரதிகள் காயமடைந்த நிலையில், பளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-சப்தன்

Related posts

பேரூந்து கட்டணத்தை குறைக்க பேரூந்து சங்கங்கள் தயாராம்

கப்ராலுக்கு தொடர்ந்தும் வெளிநாடு செல்ல தடை

கடும் மழையால் திடீரென மூடப்பட்ட யால தேசிய பூங்கா

editor