உள்நாடு

கிளிநொச்சியில் 47 கிலோ கஞ்சா மீட்பு – சந்தேகநபர் கைது.

(UTV | கொழும்பு) –

கிளிநொச்சியில் 47 கிலோ கஞ்சாவுடன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகாம்பிகைக்குளம் பகுதியில் உள்ள தனியாரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து நேற்று இரவு சோதனை மேற்கொண்ட பொலிசார் 47 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளதுடன், சந்தேசத்தின் பேரில் 44 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தொடந்தும் விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், சான்று பொருட்களையும், சந்தேக நபரையும் மன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 300 வாகனங்கள்

கெஹெலியவின் மகன் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்!

editor

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு