உள்நாடுபிராந்தியம்

கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற நபர் சடலமாக மீட்பு

கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று (17) பிற்பகல் 2:00 மணியளவில், வலையை எறிந்து கொண்டிருந்தபோது, தவறி நீரில் விழுந்து மூழ்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தில், சாந்தபுரத்தைச் சேர்ந்த 64 வயதுடைய பிச்சை துரைராசா என்ற ஆறு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-சப்தன்

Related posts

நாட்டில் தற்போது மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லை – ரவிகரன்

பல்கலைக்கழக விடுதியை சேதப்படுத்திய பத்து மாணவர்கள் – தேவையற்ற விதத்தில் பணம் அறவிட்ட நிர்வாகத்தினர்

editor

குளிரூட்டியிலிருந்து வெளியேறிய புகையால் இருவர் உயிரிழப்பு!