விளையாட்டு

கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா – அறிவிக்க மறுக்கும் நிர்வாகம்

(UTV | தென்னாப்பிரிக்கா) – தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியினருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் இருவருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியினர் சில நாட்களுக்கு முன்பாக பயிற்சியை மேற்கொண்டனர். இதையடுத்து அணி வீரர்கள் உள்ளிட்ட 50 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் இருவருக்கு மட்டும் கொரோனா இருப்பது உறுதியானது. அந்த இரண்டு வீரர்கள் யார் என்ற விவரத்தையும் தென்னாப்பிரிக்க அணி நிர்வாகம் இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பாட்டம்

சென்னையை வீழ்த்தி 4-வது முறையாக IPL கிண்ணத்தை வென்றது மும்பை இந்தியன்ஸ்!

நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி!