விளையாட்டு

கிரிக்கெட் போட்டிகளிலிருந்து படேல் ஓய்வு

(UTV | இந்தியா) –  இந்திய கிரிக்கெட் வீரர் பார்த்திவ் படேல் அனைத்து வகை போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில், விக்கெட் காப்பாளர், துடுப்பாட்ட வீரர் என இரண்டு துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டவர் பார்திவ் படேல். இந்திய அணிக்காக 25 டெஸ்ட் போட்டிகள், 28 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

இந்நிலையில், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக பார்த்திவ் படேல் அறிவித்துள்ளார்.

இத்தகவலை அவர் டுவிட்டர் மூலம் வெளியிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு நவீட் நவாஸ் நியமனம்

நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மைத் தொடர்பில் சங்கக்காரவின் கருத்து

பங்காளதேஷ் கிரிக்கெட் கட்டுபாட்டு சபை நிதி