உள்நாடு

காஸாவில் போர் நிறுத்தம் – இலங்கை பாராட்டு

காஸா போர் நிறுத்தம் தொடர்பாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

பிணைக் கைதிகள் மற்றும் கைதிகளை பரிமாறிக் கொள்ளவும், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை காஸா பகுதியில் உள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும், காஸா பகுதி மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கவும் அனுமதிக்கும் வகையில், போர் நிறுத்த ஒப்பந்தம் நிலையானதாக இருக்கும் என்று இலங்கை நம்புவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்திலும் அப்பிராந்தியத்திலும் மிக விரைவில் அமைதி நிலைநாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தொடர்புடைய அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

தொழில்முறை முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு இன்று முதல் 10 லீட்டர் எரிபொருள்

பாலியல் துஷ்பிரயோக சம்பவம் – கணிதப் பாட ஆசிரியர் கைது

பல்கலைக்கழக நுழைவு விண்ணப்பதாரிகளுக்கான அறிவிப்பு