வகைப்படுத்தப்படாத

காலி விளையாட்டுத் திடலிற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள அனுமதியற்ற கட்டிட நிர்மாணங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

(UDHAYAM, GALLE) – காலி விளையாட்டுத் திடலிற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள அனுமதியற்ற கட்டிட நிர்மாணங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களத்தின் பணிப்பாளர் பேராசிரியர் செனரத் திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

காலி கோட்டை உலக மரபு நகரமாக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த உலக மரபு நகர வளாகத்திற்குள் காலி விளையாட்டுத் திடலின் மூன்று கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபைக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கட்டிடங்களில் ஒரு கட்டிடம் மாத்திரமே அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக பணிப்பாளர் செனரத் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகளை காலத்திற்கு ஏற்ற வகையில் புதுப்பித்து சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச் செல்வது பல்கலைக்கழக உபவேந்தர்களின் பொறுப்பாகும்

காலநிலையில் பாரிய மாற்றம்

2020 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டிய விதம் தொடர்பில் டில்வின்