வகைப்படுத்தப்படாத

காலநிலை

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் தென்மேற்கு பாகத்தில் மழையுடன் கூடிய காலநிலை ஓரளவுக்கு தீவிரம் பெறக்கூடுமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேற்கு, சப்ரகமுவ. தெற்கு, மத்திய, வட மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யலாம். குறிப்பாக கொழும்பு, களுத்துறை, கம்பஹா, ,ரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் சில இடங்களில் 73 மில்லி மீற்றர் வரையிலான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்.

பிற்பகல் கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும், வவுனியா மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக திணைக்களம் இன்று காலை வெளிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

சுற்று நிருபங்களை சுற்றி வையுங்கள்- நிவாரண பணிகளை செய்யுங்கள் – அமைச்சர் மனோ கணேசன்

93 உள்ளாட்சி மன்றத் தேர்தல்களுக்கான வேட்புமனுக் தாக்கல் நிறைவு

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யமீனை கைது செய்ய பிடியாணை