உள்நாடுவணிகம்

காய்கறிகளின் விலைகளில் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –  கடந்த சில தினங்களை விட காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் கீழே,

ஒரு கிலோ கரட் 420 ரூபாய்
ஒரு கிலோ போஞ்சி 520 ரூபாய்
கோவா கிலோ 360 ரூபாய்
கத்திரிக்காய் கிலோ 400 ரூபாய்
ஒரு கிலோ பூசணிக்காய் 280 ரூபாய்
பச்சை மிளகாய் கிலோ 400 ரூபாய்
தேசிக்காய் கிலோ 800 ரூபாய்
ஒரு கிலோ தக்காளி 440 ரூபாய்

இதேவேளை, பெரிய வெங்காயத்தின் விலைகள் வழமையை விட ஒப்பீட்டளவில் அதிகளவில் காணப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

பொதுச்சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 280 ரூபா தொடக்கம் 300 ரூபாவுக்கும் இடைப்பட்ட விலையிலும், பேலியகொட மானிங் சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 250 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

பேலியகொட மெனிங் சந்தையில் உள்ளூர் உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 330 ரூபாவிற்கும் நாரஹேன்பிட்டி பொருளாதார நிலையத்தில் 480 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

Related posts

சோடா என நினைத்து டீசலை அருந்திய குழந்தை உயிரிழப்பு – யாழில் சோகம்

editor

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் நடந்த ஊழல் குறித்து ஜனாதிபதி அநுர அறிவுறுத்தல்

editor

வக்பு சபைக்கு அழுத்தம் வழங்கும் தேசிய மக்கள் சக்தியின் எம்.பிக்கள்

editor