உள்நாடு

காதல் உறவில் ஏற்பட்ட தகராறு – 05 மாணவர்கள் கைது.

கண்டி – திகன பிரதேசத்தில் காதல் உறவில் ஏற்பட்ட தகராறில் 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பல்லேகல பிரதேசத்தில் வசிக்கும் 05 பாடசாலை மாணவர்களை மெனிக்ஹின்ன பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவர் தெல்தெனிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 மாணவர்களும் 16-18 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 25ஆம் திகதி இரவு 7.30 மணியளவில் திகன ரஜவெல்ல பிரதேசத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

அத்துடன், மெனிக்கின்ன பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் எம்.டி.சந்திரபால தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Related posts

மேலும் நால்வர் அடையாளம் – கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 596 ஆக உயர்வு

கடுமையான காற்று – இருளில் மூழ்கிய மலையகம்

editor

பயிர் சேதத்திற்கு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க பணமில்லையா – சஜித் பிரேமதாச கேள்வி.