உலகம்

காசா – இஸ்ரேல் இடையே தினசரி 10 மணி நேரம் போர் நிறுத்தம் – மனிதாபிமான உதவிகளை விநியோகிக்க நடவடிக்கை

மனிதாபிமான உதவிகளை விநியோகிக்க அனுமதிக்கும் வகையில், இன்று (27) முதல் காசா பகுதியில் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் போர் நடவடிக்கைகளை நிறுத்துவதாக இஸ்ரேலியப் படைகள் அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று முதல் அல்-மவாசி, டெய்ர் அல்-பலா மற்றும் காசா நகரம் ஆகிய மூன்று பகுதிகளில் ஒவ்வொரு நாளும் காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடவடிக்கைகளை நிறுத்துவதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவித்தன.

Related posts

நியூஸிலாந்தில் பொதுத்தேர்தல் ஒத்திவைப்பு

இளவரசர் பிலிப் காலமானார்

கஷோகியின் காதலியின் வலியுறுத்தல்