சூடான செய்திகள் 1

களுத்துறை – தொட்டுபல சந்தியில் துப்பாக்கிச்சூடு

(UTV|KALUTARA)-களுத்துறை – தொட்டுபல சந்தியில் நேற்றிரவு(01) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து நாகொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் வாகனத்தில் வந்த நபரொருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளவர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், தனிப்பட்ட பிரச்சினை காரணமாக குறித்த இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

உடவளவை நீர்மட்டம் அதிகரிப்பு

உயர்தரப் பரீட்சை அனுமதிப் பத்திரம் கிடைக்காதவர்களுக்கான விசேட செய்தி

வங்காலை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல்