உள்நாடு

களனி கங்கையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கருப்புப் பாலத்திற்கு அருகில் களனி கங்கையிலிருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பேலியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, நேற்று (26) காலை சடலம் கண்டெடுக்கப்பட்டது.

உயிரிழந்த நபர் சுமார் 50 வயதுடைய 5 அடி 6 அங்குலம் உயரம் கொண்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது தலைமுடி ஒரு அங்குலம் வரை வளர்ந்திருந்ததாகவும், நீல நிற T-Shirt (டி-சர்ட்) அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் சற்று சிதைவடைந்த நிலையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

Bar Permit களை இரத்து செய்துள்ளீர்களா ? இல்லையா ? சாணக்கியன் கேள்வி

editor

தகாத உறவில் இருந்த மனைவி – கண்டுபிடித்து போட்டு தள்ளிய கணவன் – இலங்கையில் சம்பவம்

editor

காலி தபால் அலுவலகத்திற்கு பூட்டு