உள்நாடு

கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் தொடர்பிலான அறிவிப்பு இன்று

(UTV | கொழும்பு) – பாடசாலை மூன்றாம் தவணை கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பிலான அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை மூன்றாம் தவணை கற்றல் செயற்பாடுகளை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்க முன்னதாக தீர்மானிக்கப்பட்டது.

எனினும் அன்றைய தினம் சில வகுப்புகளுக்கான கற்றல் செயற்பாடுகளை மாத்திரம் ஆரம்பிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதாக கல்வியமைச்சின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் நேற்றைய தினம் பல முக்கிய கலந்துரையாடல்கள் நடத்தப்பட்ட நிலையில், இன்றைய தினம் அது தொடர்பிலான தீர்மானம் அறிவிக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்றும் சுமார் 5 மணித்தியால மின்வெட்டு

சாதாரண தர – உயர்தர மாணவர்களுக்கான அறிவித்தல்

இதுவரையில் 357 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்