78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இன்று கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய வளாகத்தில் இடம் பெற்றது.
இதன் போது தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து நாட்டுக்காக உயிர் நீத்த முப்படையினர் மற்றும் அனைத்து தரப்பினரையும் நினைவுகூர்ந்தும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்துடன் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசாரின் வழிகாட்டலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி தலைமையில் மரக்கன்றுகள் பொலிஸ் நிலைய வளாகத்தில் நடப்பட்டது.
அத்துடன் கல்முனை தலைமைக பொலிஸ் நிலையத்துடன் இணைந்து பிரபல சமூக சேவகரும் இளம் தொழிலதிபருமான மஹ்மூத் மாஜித் தலைமையில் சுதந்திர தினத்தில் பொலிஸ் நிலைய முன்றலில் 200 பேருக்கு பால் தேநீர் தன்சல் ஏற்பாடு செய்யப்பட்டு வீதியில் சென்ற பொதுமக்களுக்கு தேசிய கொடிகளுடன் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-அம்பாறை நிருபர் பாறுக் ஷிஹான்
