உள்நாடுபிராந்தியம்

கரையோர சுத்தப்படுத்துகை, பனம் விதை நடுகை செய்யும் நிகழ்வு

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களினால் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ள கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமான கரையோரப் பிரதேசங்களை சுத்தம் செய்யும் வேலைதிட்டம் மற்றும் பனம் விதை நடுகை செய்யும் நிகழ்வுகளானது இன்றைய தினம் (2025.09.24) பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில் கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் இடம்பெற்றது.

இந்த சுத்தப்படுத்துகை நிகழ்வுகளானது கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கு அமைவாக முன்னெடுக்கப்படும் “கிழக்கு கரையோரங்களை தூய்மையாக பேணுதல்” எனும் திட்டத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவின் குருக்கள்மடம் தொடக்கம் பெரியகல்லாறு வரையான கரையோர பிரதேசங்கள் சுத்தம் செய்யப்பட்டதுடன், அந்த பிரதேசங்களில் ஏற்படும் மண்ணரிப்பை தடுக்கும் முகமாக பனம் விதைகளும் நடுகை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சத்யகெளரி தரணிதரன், களுதாவளை பிரதேச சபை தவிசாளர் மே. வினோராஜ், சுற்றாடல் உத்தியோகத்தர் (மத்திய சுற்றாடல் அதிகார சபை), கடல் சூழல் பாதுகாப்பு உத்தியோகத்தர், பாதுகாப்பு படையினர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வுகளை பிரதேச செயலக கரையோரம் பேணல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஆ. ஜெயரூபன் மற்றும் யோ. நிசந்தராசன் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-ஸோபிதன் சதானந்தம்

Related posts

‘தாங்க முடியாத கடன் சுமைகளை கொண்ட நாடுகளில் இலங்கையும்’

புதிய பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஷ தெரிவு

மன்னாரில் பனை சார் கைப்பணி பயிற்சி – சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

editor