உள்நாடு

கம்பஹா தேவா கட்டுநாயக்கவில் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய சகா எனக் கூறப்படும் கம்பஹா தேவா எனப்படும் திசாநாயக்க தேவன்மினி திசாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று (03) காலை 8.10 மணியளவில் தாய்லாந்துக்கு புறப்படுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்தபோது கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் கம்பஹா பகுதியைச் சேர்ந்த 39 வயதானவர் என்றும், அந்தப் பகுதியில் இடம்பெற்ற பல கொலைகள் மற்றும் குற்றங்களுடன் தொடர்புடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு வடக்கு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானம்

editor

எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் போட்டி

editor

ஒற்றுமை தொடர்ந்தால் வெற்றி இரட்டிப்பாகும்