உள்நாடு

கண்டி – கொழும்பு விசேட புகையிரத சேவை

(UTV | கொழும்பு) –  கண்டி கோட்டைக்கு இடையில் விசேட சொகுசு வார இறுதி புகையிரதம் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வெகுஜன ஊடக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வெகுஜன ஊடக அமைச்சில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும் புதிய புகையிரதம் 9.18 மணிக்கு கண்டியை சென்றடையும் என்றும் கண்டியில் இருந்து மாலை 4.50 மணிக்கு புறப்பட்டு இரவு 7.40 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தினசரி அதிகரித்து வரும் பயணிகளின் தேவைக்கேற்ப சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புதிய ரயில்கள் இயக்கப்படும் என்று கூறும் அமைச்சர், முதல் வகுப்பு இருக்கை 2000 ரூபாய்க்கும், இரண்டாம் வகுப்பு இருக்கை 1500 ரூபாய்க்கும் வாங்கலாம் என்றும் கூறுகிறார்.

கண்டி தலதா மாளிகை மற்றும் பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு வருகை தரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகவும், கண்டி நகரின் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகவும் இந்த ரயில் பயன்படுத்தப்படும் என்று கூறிய அமைச்சர், இந்த சேவையானது ஆடம்பரமான, நம்பகமான மற்றும் பாதுகாப்பான சேவையை வழங்கும் என அமைச்சர் வலியுறுத்தினார்.

புனித யாத்திரைக்காக அனுராதபுரம் அதமஸ்தானத்திற்கு செல்லும் மக்களுக்காக கொழும்பு கோட்டை அனுராதபுரத்திற்கான புதிய விசேட புகையிரத சேவையும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

மூவரை பலி கொண்ட அதே இடத்தில் விபத்துக்குள்ளாகி 150 அடி பள்ளத்தில் வீழ்ந்த டிப்பர்

editor

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீன அரசாங்கம் உலர் உணவு வழங்கி வைப்பு

editor

கடவுச்சீட்டு, வீசா விவகாரத்துக்கு கடந்த அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் – விஜித ஹேரத்

editor