உள்நாடு

கணிதப் பிரிவில் மன்னார் மாவட்ட மாணவன் முதலிடம்!

(UTV | கொழும்பு) –

கணிதப் பிரிவில் மன்னார் மாவட்டம் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட அடம்பன் மத்திய மகா வித்தியாலய மாணவன் தியாகன் தேவகரன் முதலிடம். 2022 (2023) க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாயான நிலையில் க.பொ.த.உயர்தர பரீட்சையில் கணிதப் பிரிவில் மன்னார் மாவட்டம் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட அடம்பன் மத்திய மகா வித்தியாலய மாணவன் தியாகன் தேவகரன் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

முதலிடம் பெற்ற மாணவன் தேவகரன் அவர்கள் அடம்பன் வண்ணாகுளத்தினை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர். பாடசாலையில் ஆசிரியர்களுக்கு கீழ்ப்படிந்து நடக்கும் பண்புள்ள மாணவனாக கல்வி கற்று பாடசாலைக்கும் மடு கல்வி வலயத்திற்கும் பெருமை தேடி தந்துள்ளார். மேலும் அவரது உயர்வுக்கு பெற்றோர்களின் ஊக்கப்படுத்தல் செயற்பாடுகள் மிக முக்கிய காரணமாக இருந்துள்ளது என்று பாடசாலை ஆசிரியர்கள் தெரிவித்தார்கள்.

 

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஆர்ப்பாட்டதாரிகள் நால்வர் கைது

திசைகாட்டிக்கு வாக்கு சேகரிப்போர் இறைவனுக்கு பதிலளிக்க வேண்டியவரும் – சுயேட்சை முதன்மை வேட்பாளர் றுக்சான்

editor

எலிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோய் பரவி வருவதால் – காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடவும்

editor