சூடான செய்திகள் 1

கட்சித் தலைவர்கள் – சபாநாயகர் இடையே விசேட சந்திப்பு

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

பாராளுமன்ற தெரிவுக்குழு உள்ளிட்ட குழுக்களை நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் 11 மணிக்கு பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் அனைத்து கட்சிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, நாளை காலை  10.30 மணிக்கு பாராளுமன்ற அமர்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

மத்திய செயற்குழு கூட்டங்களில் தாம் இனி கலந்துக் கொள்ளப் போவதில்லை

மிஹின் லங்கா மற்றும் ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு

வெள்ளாங்குள பிரதேச மக்களின் பரிதாபம்! ஆசைகாட்டி ஏமாற்றப்பட்டிருப்பதாக குமுறல்…