அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

கட்சி தீர்மானித்தால் ரணிலை ஆதரிக்கவும் தயார் – மஹிந்த ராஜபக்ஷ

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்க தமது கட்சி தீர்மானிக்கும் பட்சத்தில் அதற்கு நான் ஆதரவு வழங்குவேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும் மேற்குறித்த கருத்தானது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்வுக்கு இன்னும் ஆதரவு இருக்கின்றதா ? என கேள்வியை எழுப்பினார்.

அதற்கு கட்சியே தீர்மானிக்க வேண்டும். நான் இல்லை. தீர்மானத்தை மாற்ற வேண்டும் என கட்சி கூறினால், அதனையும் செய்வேன் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

Related posts

ஹரின் பெர்னாண்டோ தொடர்பில் சட்டமா அதிபர் வெளியிட்ட அறிவிப்பு

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இலங்கை வருகை

editor

ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது தொடர்பில் ஜனாதிபதி கருத்து