உள்நாடு

கடந்த 24 மணிநேரத்தில் 28 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்டவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதன்படி, தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 1,927 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு

நெடுந்தூர பேருந்து சேவைகள் ஊழியர்கள் போராட்டம் – நேரில் சென்று நிலைமைகளை பார்வையிட்ட அங்கஜன்

அரச நிறுவன பிரதானிகள் தொடர்பில் அரசு தீர்மானம்