உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் பதிவான கொரோனா தொற்றாளர்களது விபரம்

(UTV | கொழும்பு) – இலங்கையில் இதுவரையில் 14,715 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் இனங்காணப்பட்ட 430 தொற்றாளர்களது விபரம்;

-251 கொழும்பு
-91 (82 புறக்கோட்டை, 06 பொலிஸ் தலைமையகம், மேலும் 03)
– 24 சிறைச்சாலைகளில் (23 போகம்பர, 01 குருவிட்ட)
– 18 கம்பஹா
– 16 களுத்துறை
– 08 இரத்தினபுரி
– 07 கேகாலை
– 06 புத்தளம்
– 04 கண்டி
– 02 காலி
– 01 (மட்டக்களப்பு, திருகோணமலை,நுவரெலியா [தலா ஒன்றாக])

அதனடிப்படையில் மினுவங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 11,237 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுள் 1,041 பேர் ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் 1,007 பேர் மீன் சந்தை ஊழியர்கள் என்பதுடன் ஏனைய 9,189 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் 9,537 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 5,137 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 41 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வேலைநிறுத்தப் போராட்டத்தால் தாமதமாகும் சுங்க நடவடிக்கைகள்.

𝐄𝐱𝐜𝐥𝐮𝐬𝐢𝐯𝐞: ஜனாதிபதியின் பதவிக்கால மனு: வழக்கில் நடந்தது என்ன? (முழு விபரம் )

மியன்மாரிலிருந்து 20,000 மெட்ரிக் டன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்