உள்நாடு

ஓய்வூதிய வயது தொடர்பில் தெளிவுபடுத்துதல்

(UTV | கொழும்பு) – இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயது 60 ஆக குறைக்கப்பட்டுள்ள போதிலும், மனித வள தேவைகள் காரணமாக முன்னர் ஓய்வுபெறும் வயது திருத்தப்பட்ட சேவைகளுக்கு இது பொருந்தாது என அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2022, பொதுத் துறை மற்றும் அரைப் பொதுத் துறையில் ஓய்வு பெறும் காலத்தை 60 ஆண்டுகளாகக் குறைக்க முன்மொழியப்பட்டது.

மேலும் 60 வயதை எட்டிய அனைத்து பொதுத்துறை மற்றும் அரை பொதுத்துறை ஊழியர்களும் டிசம்பர் 31ம் திகதிக்குள் ஓய்வு பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

Related posts

MCC உடன்படிக்கை தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் இல்லை

பொருளாதாரத்திலும் கல்வியிலும் முஸ்லிம் சமூகம் முன்னேற வேண்டும் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor

ஜனாதிபதியின்  புகைப்படங்களை காட்சிப்படுத்த வேண்டாம் என கோரிக்கை